தலைவருக்கு பாராட்டு விழா -  திருச்சி 17.12.2017

தலைவருக்கு பாராட்டு விழா -  திருச்சி 17.12.2017

17-12-2017 அன்று திருச்சியில் நடந்த நமது தலைவருக்கான பாராட்டுவிழா மிகச்சிறப்பாக நடந்தேறியது. விழாவின் ஏற்புரையில் தலைவர் அவர்கள் மதுரையில் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடத்த இருப்பதாக குறிப்பிட்டார். நமது சமுதாயத்திற்கு என வங்கி தொடங்க பூர்வாங்க பணிகள் நடப்பதாக தெரிவித்தார்.

கார்த்திக் மணிமொழியன் தனது உரையில், தங்களது குடும்பத்திற்கு சொந்தமான மதுரையிலுள்ள திருமண மண்டபத்தை, மதுரையில் நடக்க இருக்கும் மாநாட்டின்போது ஆயிரவைசியர்களுக்காக மாநில சங்கத்திடம் ஒப்படைப்பதாக பலத்த கரவொலிக்கிடையில் அறிவித்தார். இம்மண்டபம் மூலம் வரும் வருமானத்தில் மாநில சங்கத்தை தொடர்ந்து தொய்வுறாமல் செயல்படும்படி கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நடந்த செயற்குழுவில்,செயலாளர் டாக்டர் ஜெயராமன் அவர்கள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, கோவை திருப்பூர் மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக தனித்தனியாக இயங்க அறிவுறுத்தினார்.

மேலும் ஆயிரவைசியர்களின் நலனுக்கான பல திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன.

நமது மாநில ஆயிரவைசிய சங்கத்தின் செயலாளர் டாக்டர் அரூர் ஜெயராமன் அவர்கள் உரையாற்றும் பொழுது, மதுரையில் நடக்க இருக்கும் மாநில மாநாட்டின் போது, மறைந்த நமது மாநில தலைவர் மணிமொழியனாருக்கு மாநில ஆயிரவைசிய சங்கம் சார்பில் வெண்கலத்திலான திருவுருவ சிலை அமைக்கப்பட இருக்கிறது என பலத்த கரவொலிக்கிடையில் அறிவித்தார்.